சனி, 8 அக்டோபர், 2011

vedikkai padhadikal

வேடிக்கைப் பதடிகள்_



        ஆதாயம் தேடியே ஆயிரம் கோடியாம்
                     அலைதன்னில் மூழ்க வைப்பார்,
       சூதாடும் அரசியல் சூழ்ச்சியில் சிக்கித்
                    தொல்லைகள் அனுப விப்பார்,
      பாதாளம் ஏழினும் பணத்தினைக் கொட்டியே
                     பதவிபல தேடிக் கொள்வார்,
      வேதாளம் மரமேறும் வேடிக்கைப் பதடிகள்
                     வீணராய்அ லைகின் றாரே!
       வேர்க்காமல் உழைத்திங் குத்தமர்
                    வேடத்தில் விளையாட்டாய் வந்து போவார்,
       சேர்க்காத சொத்துகள் சொந்தமாய் வந்ததாய்க்
                  கூசாமல் கதைய ளப்பார்,
        பார்க்காத மேலிடப் பார்வைக் கேங்கியே
                 பல்லக்கைத் தாம்சு மப்பார்,
        ஏர்க்காலைப் பிடிக்காமல் உழவினை நடத்திடும்
               எத்தர்கள் திரிகின் றாரே!
       வம்புகள் புரிந்து வல்லடி செய்திங்கு
              வெற்றிகள் தாம்கு விப்பார்,
      உம்மிடம் வாக்கு எம்மிடம் பணமென
            உள்ள(த்)தை உறையில் வைப்பார்,
     அம்பினில் நஞ்சினை அமுதெனத் தடவியே
           அரசியல் கணைதொ டுப்பார்
   வெம்பிடும் மக்களின் வேதனை வித்தினில்
            வளர்பவர் இவர்கள் தாமே!! _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக