சனி, 8 அக்டோபர், 2011

துயில்

துயில் - நாவலும், நோய்மை பற்றியபுரிதலும் -ஒரு மேலோட்டப் பார்வை -
இராம.குருநாதன்
allroads lead to Rome என்பதுபோல நாவலில் வரும் பாத்திரங்கள் தெக்கோடு தேவாலயத் திருவிழாவை நோக்கிப்போய்க்கொண்டிருக்கிறார்கள். நாவலில் நோய்மையைப் பற்றியே பெரிதும் சிலாகிக்கப்படுகிறது.நோயில்லாத மனிதன் இருக்கமுடியாது. ஏதாவது ஒருவகையில் மனித மனம் நோயிருப்பதாகவேகற்பனை செய்துகொண்டு நலிவடைவதும், அதனைஎதிர்கொள்ளத் தயங்குவதும் மனத்தின் இருப்பாகவே இருந்துகொண்டிருக்கிறது. நோய்மைபற்றிய விரிவாகப் பேசும் இந்நாவல் தமிழ் இலக்கிய உலகிற்குப் புதிய வரவாகஅறிமுகமாயிருக்கிறது.

தொடக்கமும் இறுதியும் -ரயில் பயணத்தில் தொடங்கி ரயிலுக்காகக் காத்திருத்தலில்நிறைவடையும் உத்தி புதியதில்லை எனினும், கதாநாயகன் தான் ரயிலுக்காகக் காத்திருக்காது தன் பார்வையை வேறுதிசையில்திருப்பிக் கொள்கிறான். இருப்பினும், ரயில் பயணியமாய் மக்கள் வாழ்க்கை தொடர்ந்து பயணித்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதைப் பூடகமாகத்தெரிவித்துள்ளார் ஆசிரியர்.

மேலைநாட்டு x மருத்துவம் கீழைத் தேயமருத்துவம், மேலைநாட்டுக்கலாச்சாரம் (உள்ளூர்) x கீழைநாட்டுக் கலாச்சாரம், மதம் x மருத்துவம்,கீழ்ச்சாதி x மேல்சாதி ஆகியவற்றை நாவல் இரட்டை எதிர்மையாக(binaryopposite)ஆங்காங்கே விளக்கிச்செல்வதும் அதற்கான சூழ்நிலையை உ.ருவாக்கிக் கொண்டும் காட்சியும் களமுமாக நகர்ந்துசெல்கிறது நாவல்.

நாவல் நிகழ்ச்சியின் பின்னணியில் சில சமயம் போஸ்ட் மார்டனிஸமும், மிகச் சிலவிடத்து மாஜிக் ரியலிஸமும் (சிறுமிசெல்வி அறியாமையாலும், ஆர்வத்தாலும் வினாத் தொடுத்தல், நத்தை, ஒட்டகச்சிவிங்கி, ஓணான் கிழவி,அண்டரண்ட பட்சி போன்றுவரும் நிகழ்ச்சிகள் பற்றித் தன் ஒத்த சிறுவர்களிடமும் பெரியவர்களிடமும் விவாதிக்கும் இடங்கள்)பின்னோக்கு உத்தியும் ஆங்காங்கே தலைஎடுப்பதைக் காணமுடிகிறது.

பாத்திரங்களின் வார்ப்பில் பிராய்டியப் போக்கும்(டீ மாஸ்டர் சௌடையாவின் சேட்டை, கடை வைத்திருக்கும் கிட்ணனின் மனைவியோடுஅழகரின் அப்பா முத்திருக்கை படுத்துச்சுகம் காண்பது, சீயன்னா சூயின் மனைவி மியாவிடம் உறவு கொள்வது)சிற்சில இடங்களில் ஜென்னின் வார்ப்பும்( கொண்டலு அக்காவின் அருளுரை, ஏலன் பவரின் சில வார்த்தைகள்) இருக்கத்தான் செய்கின்றன. நாவலை வளர்த்துச்செல்ல ஆசிரியருக்கு அவை கைக்கொடுத்திருக்கின்றன.
கவர்ச்சி என்ற ஒன்றின் மீதே நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கவர்ச்சி என்றஒன்றில்தான் அனைவரின் கவனமும் ஈர்ப்புடையதாகிறது போலும். காமம் கடந்து செல்வதற்குஅரிது. ஆசிரியர் சொல்வது போல, 'காமத்தில் மனிதன்தோற்றுப்போகிறான் அல்லது அதனை வேட்டையாடுகிறான்'

அழகரின் மனைவி சின்னராணி போடும் கடற்கன்னி வேடம் அதனைத்தான் நினைவூட்டுகிறது.அவளைக் கொண்டு பிழைப்பு நடத்தும் அழகருக்குச் சாத்திய மாவதோடு, கடற்கன்னி பற்றி நிலவும் தொன்மமும் ஊடிழையாகச்சொல்லப்பட்டு இருக்கிறது. கடற்கன்னியாக அவளைப் பார்த்துப் 'பிளைமவுத் கார்' வைத்திருக்கும் பணக்காரன் ஒருவன் தன் பணியாளானகுருடன் ஒருவனோடு அவளது புற உறுப்பைப் பற்றிய கற்பனையில் தொட்டுப் பார்க்கநினைப்பதும், அரப்பளி என்ற மலைக் கிராம வாசியான மூப்பக்கிழவன் மலைத்துப் போய்த் தன் ஆயுளில் அப்படிப்பட்ட ஒருத்தியைப் பார்த்து ஈடேற்றம்அடைந்துவிட்டதாக நினைப்பதும், ஆசைவலையில் அழகரைவிழவைக்கும் மாஜிக் கண்ணாடி ஷோ நடத்தும் தம்பான் கடற்கன்னியாக இருப்பவளைப்புணர்ந்து பார்த்துவிடுதான வெறியில்அவளிடம் வன்புணர்ச்சி கொள்வதும் கடற்கன்னி பற்றிய தொன்ம நம்பிக்கை ஒரு காரணமாகஇருக்குமோ என்று தோன்றுகிறது.

அழகரின் கதை, கூடவே ஜக்கியின்கதை, வெளிநாட்டிலிருந்துதெக்கோட்டுக்கு மருத்துவச் சேவை செய்ய வந்த ஏலன் பவர், நோயாளிகளுக்குப் பணிவிடை செய்து அன்பையும்அருளுரையும் தரும் கொண்டலு அக்கா ஆகிய நால்வரைச் சுற்றித்தான் நாவல் நடைபோடுகிறது.இவர்களின் நிகழ்ச்சியினூடே உதிரிப் பாத்திரங்களும், கதைக்குள் கதையாக உலவும் சில நிகழ்வுகளும் நாவலின் கட்டுக்கோப்புக்கு உறுதுணையாகஇருக்கின்றன.

கதைப்பின்னலை ஆசிரியர் அமைத்துக்கொண்ட களமும், கதைசொல்லும் விதமும் நேர்த்தியான நெசவில் அழகுறப்பின்னப்பட்டுள்ளன. ஒரு வகையில் முன்பின் அமையும் மாற்றுக் காட்சியும், கதையின் பின்னணிப்புலமும், தேவாலயம் உருவாகி வளர்ந்த வரலாறும், ஆசிரியரின் அகல வாசிப்பில் விளைந்தவிளைச்சலாகவே கருதத்தக்கன.

அழகரின் கதையில் வாழ்க்கையின் முழுமையும் அர்த்தப்பட்டு விடுவதான ஒரு தோற்றம்கொள்கிறது. ஒவ்வொரு சமயமும் கடற்கன்னியாக வேஷம் போடுவதில் நாட்டமில்லாத சின்னராணி,(அவள் மெலிந்த தோற்றமும், கருமை நிறமும் கொண்டிருப்பவள்) கணவனை விட்டுப்பரிமளம் சித்தி வீட்டில் தஞ்சம் புகுந்த அவளை அடித்து உதைத்து இழுத்துவரும் அழகர்,அவளிடத்துத் தன்கஷ்டநட்டங்களை எடுத்துச் சொல்லி மீண்டும் பிழைப்புக்கு வழிதேட முயலுதல், கால் சூம்பிப்போய் இழுத்து இழுத்து நடக்கும்அவர்களின் பெண் செல்வி ஆகியோர் தெக்கோடுக்குச் செல்லும் ரயிலில் பயணிக்கும் போதுஅதில் சந்திக்கும் (நோய் தீரவேண்டியும், நேர்த்திக்கடன் செலுத்தவும் துயில் தரு மாதாவைக் காணச் செல்லும்) மனிதர்கள்,உப்பாற்றுப் பாலம்,பனையூர், அச்சம் பட்டி, ஈச்சங்காடு, திருவேலம், தெக்கோடு விலக்கு ஆகிய இடங்கள் சிலவற்றில்அழகர் கடற்கன்னி 'ஷோ' நடத்துதல், பொன்னியை ரயிலில் சந்தித்து அழகர் தன்காமத்தைத் தீர்த்துக்கொள்ள நினைப்பது. திருமணத்திற்கு முன் பேரின்ப விலாஸில்பாலியல் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் ஜிக்கியைச் சந்தித்து அவள் சார்ந்தபெண்களான டோலி, ராமிஆகியவர்களின் உறவும், ராமி உடலுறவைஅழகருக்குக் கற்றுத்தருதலும், அவள் நாகக்கன்னிவேடமிட்டுச் சம்பாதித்துக்கொடுப்பதும், பின்னர் அவனைப் புறக்கணிப்பதும் அழகரை இயல்பானதொரு சூழ்நிலக்கு ஆளாக்குகிறது.
திருமணம் ஆகிச் சில ஆண்டுகள் கழிந்த பின்னாலும் ஜிக்கியை நினைத்தலும், நாவலின் இறுதிக்கட்டத்தில் தம்பான் ஜிக்கிபற்றிய தகவலைச்சொன்னதும் அவளைத் தேடிப்போவதுமாகக் கதை நீள்கிறது. தான் நடத்திவந்த மாயக்கண்ணாடியை அழகருக்கேகொடுக்க நினைத்து அவன் மனைவியைத்தன் வசமாக்கும் முயற்சியில் தம்பான் அழகரைமதுரைக்கு அனுப்பிவிட்டுச் சின்ன ராணியைத் தன்னுடன் வந்துவிடச் சொல்வதும், அவள் மறுத்ததும், அவளை மச்சான் உதவியால் வன்புணர்ச்சி செய்வதும்அவள் அச்சாணியால் தம்பானைக் குத்திக் கிழித்துக் கொலை செய்துவிடுவதும், அவள் சிறை செல்துவதுமான கதை பயணித்துமுடிகிறது. இதற்கிடையில் செல்வியிடம்அழகரும், சின்னராணியும்அவளைத் தேடி அலைகிறார்கள். அவள் மார்ட்டின் என்ற சிறுவனோடு தட்டைக்காடு செல்லும்வழியில் திசையறியாது காணாமல் போவதும் அவளைத் தேடித்திரியும் அழகர், அச்சம்பட்டியில் அவள் கிடைத்ததும் அவளோடு தெக்கோடு திரும்பியநிலையில் ஒரு பிச்சைக்காரன் மூலம் சின்ன ராணி தம்பானைக் கொலை செய்த விவரத்தை அழகர்அறிகிறான். செல்விக்காகவாவது இனி வாழவேண்டும் என்ற நினைப்பில் தெக்கோட்டிலிருந்துதிரும்பிப் போக இரயில் நிலையத்தில் காத்திருக்கிறான். வாழ்க்கையில் எப்படியாவதுசம்பாதித்து முன்னுக்கு வர நினைக்கும் அழகர் பாத்திரம் பல்வேறு சூழ்நிலைகளில்அலைபாய்ந்திருப்பினும் அவன் இறுதியிலாவது தன் நிலையை உணர்கிறான். செல்வியின்எதிர்காலம் குறித்த வினாக்குறி அவனைச் சிந்திக்கவைக்கிறது. நடைமுறைப் பாத்திரத்தின் வெளிப்பூச்சுச் சிறிதுமற்றவனாகக்கதையில் உலவுகிறான்.

கதையின் பிரதானப் பாத்திரம் இவர்கள் என்றால், இதில் வரும் கொண்டலு அம்மா அன்னை தெரஸாவை நினைவூட்டும் வகையில்நோயாளியிடம் பரிவும் பாசமும் காட்டும் தொண்டுள்ளம் மிக்கவளாக விளங்குகிறாள்.கதைக்குள் கதையாகப் பல நிகழ்ச்சிகள்( மெட்டா ஃபிக்ஷன்) எட்டூர் மண்டபத்தில் வந்துதங்கும் நோயாளிகள் வழியே அறியப்படுகின்றன. எட்டூர் மண்டபம் ஒருகாலத்தில் குதிரைகள் தங்கும் இடமாக இருந்ததைச்சீர்ப்படுத்தி அங்கேயே தங்கிப்பணிவிடை செய்யும் பண்பு மிக்கவளாகத்திகழ்கிறாள்.
எட்டூர் மண்டபம் இளைப்பாறும் ஆரோக்கியத்தலமாக விளங்குகிறது. நோயை விட நோயாளி முக்கியம். மருந்துமாத்திரைகள் நோயைத் தணிப்பதை விட மனத்துக்கு ஆறுதலாகச் சொல்வதுதான் நோய்தீர்க்கும்ரகசியம் என்பதை அறிந்துவைத்திருக்கும் சமுதாய மருத்துவராக விளங்கும்பாத்திரம் கொண்டலு அக்காளுடையது. நோயாளி தனித்து விடப்படுபவன் அல்லன். அவன்அனைவரோடும் ஒன்று சேர்ந்து இருக்கவேண்டும் என்று நினைப்பவள் அவள்.தன்னிடம் வரும் நோயாளிகள், அவர்களின் வாழ்க்கை வேரில் மறைந்துகிடக்கும் பின்னணியை அவர்கள்அவளிடம் சொல்லும் கதைகள் விசித்திரமானவை. கதையை நீட்டிருப் பதற்கும், கிளைக்கதைகளை அமைத்துக் கொள்ளவும் எட்டூர்மண்டபம் ஆசிரியருக்குக் கைக்கொடுத்திருக்கிறது. அந்த வகையில், தாணிக்குடிமாரியம்மன் திருவிழா, வழிமறிச்சான்மேட்டில், தாழ்ந்த சாதியில்கஞ்சி வாங்கிக் குடித்ததற்காகத் தன் மருமகளை ஒதுக்கிவைத்ததோடு, அவள் தலை மீது கல்லைப் போட்டுக் கொன்றுவிடும்மாமியார்க் கிழவி, பர்மாவில் கடை நடத்திய சீயன்னா சூயி என்ற பர்மாக்காரன்மனைவி மியாவிடம் தவறாகப் பழகிய சீயன்னாவின் கதை, சரவண முத்துவின்மனைவி அமுதினி தன் கணவனையும், அவன் சார்ந்தஉறவுகளையும் வ¬த்ததுப்பார்ப்பதில் ஆனந்தம் அடையும் ஒரு 'மெசோகிஸ்ட்'மனோபாவம் கொண்டவளின் கதை, விரல் பிரிக்கமுடியாத நிலையில் அழுகிய நாற்றத்துடன் பிறர் நெருங்க அஞ்சும் சிவராமன் கதை,செருப்புத்திருடன் கதை,கோமகள் கதை, பிறருக்கு எடுத்துக்காட்டான அறவாழ்க்கையில்காலம் கழித்த தானப்பன், ரமணன் ஆகியஇரட்டையர் கதை, மற்றும்சாந்தியாகு, ஆஸ்டின், பெஞ்சமின், பர்னாபாஸ், கரோலினா, டோலாஸ்( 'நார்ஸிஸ்ட்' மனோபாவம் கொண்டவள்), தியோடர், முதலியோர் எட்டூர் மண்டபத்தில் தஞ்சம் புகுந்துஅங்கிருந்து தெக்கோடு செல்ல நினைத்து அங்கு இளைப்பாறுகிறர்கள். அங்கு இறுதியாகவந்து தங்கும் ஐந்து நோயாளிகளிடமும் காணப்படும் விசித்திரங்கள் கதையை மேலும் விரிக்கப் பயன்பட்டுள்ளன.

கதையின் முக்கிய அம்சமாக விளங்குபவள் ஏலன் பவர். 1873 இல்தெக்கேட்டிற்கு ஞானத்தந்தை லகோம்பாவால் மருத்துவப்பணி புரிய அனுப்பப்பட்டவள்.அழகர் கதையோடு அவளுக்குத் தொடர்பில்லை என்றாலும், நாவலில் அவள் பங்கு இன்றியமையாததாய் இருக்கிறது. ஆசிரியரின் நோக்கத்தையும், கிறித்துவ மதம், கிறித்துவ கலாச்சாரம் பற்றிய புரிதல், மேலைநாட்டு மருத்துவமும், கீழை நாட்டு மருத்தவமும், மதமும், மருத்துவமும் பற்றி உள்ளூர் மக்கள்கொண்டிருக்கும் நம்பிக்கை முதலியவற்றிற்கு அவள் ஆற்றும் பங்கு மிக முக்கியம்.மனிதன், மதம், கடவுள் பற்றிய தத்துவார்த்த விசாரணை, தான் கற்ற மருத்துவப் படிப்பு, ஆண்களைப் பற்றிய மதிப்பீடு, உள்ளூர் வாசிகளின் கலாச்சாரம் பற்றி அவள் அறிந்துகொண்டவை,மருத்துவ சிகிச்சையில்உள்ளூர் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை, அவள் மேற்கொண்ட வைத்தியமுறைகள் முதலியன நாவலில் அவளுக்குள்ள இடத்தை நிறைவுசெய்வன. அவள் மேற்கொண்ட வைத்தியத்தில்ஆட்டுத் திருடனின் கைவிரலுக்கு மருத்துவம் பார்த்தது, புளியந் தோப்புப் பூசாரி இருள்ளப்ப சாமியின்மூர்க்கத்தனமான நடவடிக்கையை வெறுப்பது, நாகலாவின்தலைப்பிரசவத்தில் தாயையும், குழந்தையையும்தன் வைத்தியத்தால் காப்பாற்ற முடியாமை, கிழவரைக் காது கேட்க வைத்தல் முதலானவற்றில் ஏலன் பவர் பங்காற்றிருப்பதும் அவள்மீது உள்ளூர் மக்கள் பகையும். நட்பும் கொண்டிருத்தல் ஆகிய நிலைகளில் அவள்பாத்திரம் ஒருவகையில் ஒட்டுப்பாத்திரமாகவே நாவலில் உலா வந்தாலும் நோய்மை பற்றியகருத்தாங்கங்களுக்கும், இந்தியமருத்துவம் குறிப்பாக நாட்டுப் புறமருத்துவம் பற்றிய அறிதலுக்குமாய், கடவுளைக் காட்டி நோய் தீர்வதற்குப் பதில் கற்றகல்வியைப் பயன்படுத்தி நோய் தீரக்கவேண்டும் என்ற உணர்விற்குமாகப்படைக்கப்பட்டிருப்பதாகவே அவளது வருகை இடம் பெற்றிருக்கிறது. அவள் மதநம்பிக்கைக்கு எதிராகச் செயற்படுவதாய்ப்பாதிரியார் புகார் அளிக்கவும், அவள் அதனைஎதிர்கொள்கிறாள். கல்கத்தாவிலிருந்து ஏலன் பவரை விசாரிக்கத் தனிக்குழு வருகிறது.பவர் தன் மீது குற்றம் இல்லை என்று மெய்பிக்கத் தன் சார்பில் கருத்தினைஎடுத்துமுன் வைக்கிறாள். தன் மீது குற்றம் இல்லை எனவும் எடுத்துரைக்கிறாள்.நாவலில்அவள் பங்கு அவளை அறிவுசார் பாத்திரமாக அமைத்துவிடுகின்றது. குற்றமற்றறவள் நிரூபித்தல், கல்காத்தாவிலிருந்து வந்த விசாரணைக்குழுகுற்றமற்றவள் எனத் தீர்மானித்தல். தேவாலயத்தின் அருகில் புதிய மருத்துவ மனையைஊர்மக்களின் உதவியோடு உருவாக்கவும் செய்கிறாள். பவரிடம் குதிரை வண்டிக்காராகச் சேர்ந்த கிக்கிலி என்பவன் அவளது கொலைக்குக்காரணமாக இறுதியில் சொல்லப்படுகிறது. மேல்சாதிக்கார ர்களின் தூண்டுதல் காரணமாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.சாட்சிகளாக, கிடாத்திருக்கை, சசிவர்ணம், சவலை, மாரியம்மாள், கனகவல்லி, சீயாளி, அந்த்ரேயா, எலன் பவரின் கொலை குறித்து முறையாகவிசாரிக்கப்படுதல் ஒரு பரபரப்பை ஊட்டுவதாய் உள்ளது. கடித உத்தி மூலமே அவளின்கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது புதிய உத்தியில்லை.

இன்றுள்ள சூழ்நிலையில் பெண்ணும் பேசப்படவேண்டிய வாகிறாள். தனக்கு ஊறுநேரும்போது அதனை எதிர்க்கொள்ளவும் தயாராக இருக்கிறாள். கால மாற்றம் பெண்களுக்கானபுதிய வீரியத்தை அளித்திருக்கிறது என்பதன் அடையாளமாகத் தான் சின்னராணி தம்பானைக்கொலை செய்கிறாள். அதே போழ்தில் சமூகத்தின் நோயாக இருப்பதை அடையாளப்படுத்த ஜிக்கிகதை இயல்பாகச் சொல்லப் பட்டிருக்கிறது. சமூக சேவையில் எந்தச் சுயநலமுமின்றித்தங்களைக் கரைத்துக் கொள்பவர்களாக எலன் பவரும், கொண்டலு அக்காவும் மறக்கமுடியாதவர்களாகவிளங்கிப் பிறருக்காக வாழும் வாழ்வை மேற்கொள்கிறார்கள். சின்ன ராணி கணவனைச் சிலநேரங்களில் புறக்கணித்தாலும் அவன் பிழைப்புக்காகத் தன்னைத்,தியாகம் செய்யவேண்டியவளாகிறாள். இப்படிப்பெண்களின் பங்கு முக்கியமான வார்ப்பில் அமைந்து இருக்கிறது.

பத்தொன்பது, இருபதாம்நூற்றாண்டுகளில் நாட்டில் கிறித்தவம் பரவலாகப் பரவத் தலைப்படுவதையும், ஆங்கில மருத்துவத்தின் வருகை மக்களை எதிர்கொள்ளவைத்த விதத்தையும் இந்த நாவல் வெளிப்படுத்தியுள்ளது. சாதிய ஆதிக்கம் எப்போதும்இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதையும் ஆசிரியர் காட்டத் தவறவில்லை.

நோய்மை பற்றிய புரிதலும், மனம் சார்ந்தநிலையில் அதனை நோயாளி எதிர்கொள்ளும் விதமும், பரிவும் கருணை மொழியும் கொண்டு அணுகினால் நோய்பாதி தீர்ந்தது போலத்தான் என்ற தகவலைச் சொல்லும் நோக்கமும் துயில் நாவலைநமக்கு மிக நெருக்கமாகக்கொண்டுவருகிறது. அதன் மூலம்விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

எஸ். இராமகிருஷ்ணனின் துயில் கடந்த காலத்தின் புனைவுதான். ஆனால் அதுஇன்றைக்கும் நிகழ்காலத்தின் நிஜமாக இருப்பதுதான் இந்த நாவலுக்கான வெற்றி.

vedikkai padhadikal

வேடிக்கைப் பதடிகள்_



        ஆதாயம் தேடியே ஆயிரம் கோடியாம்
                     அலைதன்னில் மூழ்க வைப்பார்,
       சூதாடும் அரசியல் சூழ்ச்சியில் சிக்கித்
                    தொல்லைகள் அனுப விப்பார்,
      பாதாளம் ஏழினும் பணத்தினைக் கொட்டியே
                     பதவிபல தேடிக் கொள்வார்,
      வேதாளம் மரமேறும் வேடிக்கைப் பதடிகள்
                     வீணராய்அ லைகின் றாரே!
       வேர்க்காமல் உழைத்திங் குத்தமர்
                    வேடத்தில் விளையாட்டாய் வந்து போவார்,
       சேர்க்காத சொத்துகள் சொந்தமாய் வந்ததாய்க்
                  கூசாமல் கதைய ளப்பார்,
        பார்க்காத மேலிடப் பார்வைக் கேங்கியே
                 பல்லக்கைத் தாம்சு மப்பார்,
        ஏர்க்காலைப் பிடிக்காமல் உழவினை நடத்திடும்
               எத்தர்கள் திரிகின் றாரே!
       வம்புகள் புரிந்து வல்லடி செய்திங்கு
              வெற்றிகள் தாம்கு விப்பார்,
      உம்மிடம் வாக்கு எம்மிடம் பணமென
            உள்ள(த்)தை உறையில் வைப்பார்,
     அம்பினில் நஞ்சினை அமுதெனத் தடவியே
           அரசியல் கணைதொ டுப்பார்
   வெம்பிடும் மக்களின் வேதனை வித்தினில்
            வளர்பவர் இவர்கள் தாமே!! _

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011


மாத்திரை வாழ்க்கை

சர்க்கரை நோய்க்கு... 'டோல்செல்' மாத்திரை
இரத்தக் கொதிப்புக்கு 'இசாம்' மாத்திரை
இருதய நோய்க்கு 'கால்சிகார்டு' மாத்திரை
கொழுப்புச் சேராதிருக்க 'டோனாக்ட்;' மாத்திரை
இப்படி மாத்திரைகளோடு மாத்திரையாய்ப்
பழகிப் போனது வாழ்க்கை
இதில் உயிர்எழுத்துக்கு
எத்தனை மாத்திரை?
மெய்யெழுத்துக்கு
எத்தனை மாத்திரை?
உயிர்மெய் எழுத்துக்கு
எத்தனை மாத்திரை?
இவை தெரியாவிட்டால் என்ன?
உயிர் வாழ மாத்திரைகள் இருக்க
ஓடிக்கொண்டே இருக்கிறது வாழ்க்கை,
தேடிக்கொண்டே இருக்கிறோம்
இலக்கணச் சுத்தமாய் மாத்திரை
வாழ்க்கையை!

திங்கள், 5 செப்டம்பர், 2011


வெறுமை வெளிகள்
_____________________________________________________________________________

இறந்த காலம், எதிர்காலம் -எதுதான்
இங்கே நிகழ்காலம்,?
காலம் என்பது விளையாட்டா?
ககனம் மீதோர் தாலாட்டா;:?

தேட்டம் மிக்க மானிடத்தில்
தேடிப்பெறுவ தொன்றுண்டா?
ஆட்டம் இங்கே ஆயிரங்கள்
அணுவின் சோதனை மனவெளிகள்!
ஓட்டம் விரையும் பந்தயத்தில்
ஒருநொடிப் பொழுதில் அழிவெல்லை!
வீட்டை விட்டு வெளிவந்தால்
வீட்டை நினைக்கும் விந்தைமனம்!
வீடும் காடும் வெறும்வெளியா?
விட்டு வருவதே விடுதலையா?
நாட்டம் இல்லா வாழ்வினிலே
நடக்கும் யாவும் கேளிக்கையா?
வாட்டம் நீக்க வழிகளுண்டா?
வழியும் பழியும் யாரிடத்தே?
கூடிக் கலையும் நாடகத்தில்
கூட்டிக் கழித்த மிச்சமென்ன?
பாடிக் களித்த வாழ்க்கையதில்
படிந்த பாசி யகன்றிடுமா?
சீலமிக்க நதியினிலே
செல்ல மறுக்கும் மனஒடம்!
ஓலமிக்க மானிடத்தின்
ஒற்றைப்பாதை வழிநடப்பில்
ஓடிக்கொண்டே இருக்கின்றேன்,
ஓடிக்கொண்டே இருக்கின்றேன்

நான்
காலம் என்னும் திரைக்கடலில்
கரையேறத் துடிக்கும் சிற்றெறும்பு!

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

puthumaippithan


Posted by Picasa

manmagan


Posted by Picasa

keats and keerar


Posted by Picasa

keat's poem


Posted by Picasa

akayaverkal


Posted by Picasa

peyarvu


Posted by Picasa

purananaru


Posted by Picasa

Posted by Picasa

Posted by Picasa

mundelukanal

பெயர்வு-2



Posted by Picasa


Posted by Picasa

புதன், 24 ஆகஸ்ட், 2011

சங்கப் பாட்டும் ஜப்பானியக் கவிதையும்


Posted by Picasa

ஜெயித்துக் காட்டுவோம்


Posted by Picasa
காந்தி நாளில் மட்டுமே வருகிறாயே! காந்தி


அடிமைத்தளையில் உன்னால் மட்டும்
எப்படிக் கிளை விடமுடிந்தது?
நிறப்பேதப் பாறையின் இடுக்கில் சிக்கியும்
எப்படி அமைதியாய் உன்னால் சிரிக்க முடிந்தது?
நிறத்தை மாற்றிக் கொள்ளாத
ஒற்றைச் செடியாய்த் தனியே மண்ணில்
எப்படி உன்னால் மணக்க முடிந்தது?
அன்னியர் வெப்பம் ஊடுருவியும் கூட
எப்படி உன்னால் தழைக்க முடிந்தது?
விடியலுக்கான வெளிச்சத்தில் வேரையும்
இலையையும் இழந்த பின்னும்
எப்படி இரத்தம் கசிய உன்னால் முடிந்தது?
ஆனால் ஒன்றை மட்டும் தெரிந்துகொள்!
நெடுவெளியில் நீ கற்பூரச் செடியாய்
மணந்தபோதுதான்
எங்கள் தேசத்தின் மூச்சுக்குழாய்க்கு
உயிர்ப்பே வந்தது.
உன்வாசத்தை நுகர்ந்தபோதுதான்
எங்கள் சுதேசி ரத்தம் சுத்தமாயிற்று.
மண்ணில் நீ மரித்தபோதுதான்
ஓர் இந்தியன் இறக்கிறான்
என்ற உணர்வே வந்தது.
மறுபடி மண்ணில் நீ
எப்போது மலர்கின்றாயோ
அப்போதுமட்டுமே
எங்கள் ஆன்மா புனிதமாகும்.
அதுவரை நீ நினைக்கமட்டுமே!!


matham- sammatham

மரித்துப் போகாத மத உணர்வுகள்!
___________________________________________________________________________
கல்வாரியில் கசிகிறது
கண்ணீர்.
போதி மரத்தில்
வடிகிறது செந்நீர்.
மெக்கா முகாம்களில்
முகாரி கேட்கிறது.
குருஷேத்திரத்தில் கிழிந்த
பக்கங்களாய்க் கிடக்கிறது கீதை

மதங்கள் மனிதரால்
உண்டாக்கப்பட்டுக்
கடவுளால் காக்கப்படுகின்றன

கடவுளைக் கைது செய்
விசாரணை நடத்து
கடவுளை நிறுத்தித்
துக்கம் விசாரி

மனிதத்தைக் கொலை
செய்தவனிடமே துக்கம் விசாரிப்பதா?

மனிதத்தை மதத்தின் பேரால்
மரணக்குழியில் தள்ளிய
மதவாதிகளுக்கு
அவன்தானே காரணம்!
இதனை மறந்து விட்ட
மனிதம் வளருமா?

மனிதம் பிழைக்க
மதந்தான் தடைக்கல்!
எடைக்கல்லாக
இருக்கவேண்டியவர்கள்
தடைக்கல்லாக ஆனபோதுதான்
மனிதன் மானிடத்தின்
ருசி அறியாமல் போனான்!

தெய்வத்தைப் பாதுகாக்காதே
தேசத்தைப் பாதுகாவல் செய்!

மதத்தின் பிடியில்
இறுகிப் போன
மரணச் சங்கிலி
அதிலிருந்து விடுதலை பெறு.
மதம் வளர்க்காதே!
மானிடம் வளர்.

இங்குப் பருகும்
குவளையிலும்
படுக்கும் தரை விரிப்பிலும் கூட
மதத்தின் பருக்கைகள்
ஒட்டிக்கொண்டுள்ளன.

மக்கா நகரமே
தேவ மைந்தனின் திருமறை
கேட்கச் செவி சாய்க்கிறது.
மார்கழிப் பனிப்புலர்
காலையில் பைபிளின்
வாசகம்
பாவைப் பாட்டோடு
சேர்ந்து ஒலிக்கிறது.

சீக்கியக் குருத்துவாராக்களில்
குரான் ஓதப்படுகிறது.

நபிகளை விருந்துண்ண
நாயகன் இராமன்
அயோத்தியிலிருந்து
அழைப்பு விடுக்கிறான்.

ஏசுபிரான் இளைப்பாறுதற்கு
அன்பின் பரிமாற்றத்தால்
அழைப்புமடல் செல்கிறது.

எருசேல மக்கள் நீராடிக்களிக்க
கங்கைக்கும் யமுனைக்கும்
வந்து கொண்டிருக்கிறார்கள்

மசூதியின் மினாரிலிருந்து
மாடப்புறாக்கள் சிறகடித்த படியே
வானில் வலம் வருகின்றன
மாதாக்கோயிலின் மணிப்புறாக்கள்
அவற்றை வரவேற்கின்றன.

மதவெறிக்குத் தாகம்
எடுக்கும்போது
ரத்தம் குடிக்கும்
நரமாமிசமே பசி தணிக்கும்
அதன் கோரப்பற்களில் சிக்கித்
தவித்துக் கிழிபடுவது
மனித நேயமே

புதைகுழியிலிருந்து தோண்டினார்கள்
புத்தர் எழுந்தார்
அன்பைச் சமாதியாக்கிவிட்டதற்கு
வருந்தி மீண்டும் மண்ணில் புதைந்தார்,

மரித்து வந்த ஏசுவிடம்
கேள்வி கேட்கப்பட்டது
புனிதச் சிலுவையின்
பொருள் என்ன வென்று
'மண்ணில் புதையுண்டு போகவே'
என்று பதில் வந்தது

நபிகள் ஓடோடிவந்தார்
'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்பதில்
ஒரு திருத்தம் என்றார்
இகழ்ச்சி என்ற வார்த்தை
இடம் பெயர்ந்து போனதாய்த்
திருத்தம் சொன்னார்.

காந்தியும் வந்தார்
கோட்சேவும் வந்தான்
அவர்கள் இருவரும்
பரிமாறிக் கொண்டனர்-
காந்தியின் கைகளில் ஏ.கே 47,
கோட்சேயின் உதட்டில் 'ஹேராம்' மந்திரம்
மானிடம் இவர்களின்
செயல்களை அங்கீரித்தது.



cellphone

செல்போன்- நீ அப்படிப்பட்ட பெண்ணா?! - பொன்னி

என் கட்டை விரலும் சுட்டுவிரலும்
அடிக்கடி உன்னை நிமிண்டும் போதெல்லாம்
ஒரு சுகானுபவம் இருக்கத்தான் செய்கிறது.
அதனால் தேடலிலும் கூட ஊற்றின் பிரவாகம்.

கைவிரல் குறும்புகளால் இன்ப அதிர்ச்சி கூடுகிறது.
நாடிநரம்புகளில் உணர்ச்சியின் உச்சகட்டமாய் விரிகிறது.
பரப்பின் எல்லை பலவிதமாய் அதிகரிக்கிறது.

ஒவ்வொரு முறையும் நகக்குறியால்
இலேசாக வருடினாலும் உன் முகத்திலும்
என் கைவிரல் நகர்விலும் ஒரு பரவசம் தெரிகிறது.
புன்னகை புரிகிறது உன்முகமும் என் விழிகளும்.

அடிக்கடி
கைவண்ணம் மீட்டுகிறேள்
கால்(நீணீறீறீ) வண்ணம் கூட்டுகிறேன்

உன்னைத்
தொட்டுக்கொண்டிருக்கும் நாழிகை
தொடரும் நீண்ட கணங்களில்
கண்கள் சிவப்பாய்ப் பூத்துவிடுகின்றனவே!

நீ வண்ண வண்ண ஆடைகளில்
வலம் வரும்போது
பொலிவு கூடுகிறது
பார்க்கும் போதே ஒரு பரவசம் படர்கிறது

உன்னை அடிக்கடி மாற்றுவதிலும்
கூட ஒரு சுகானுபவந்தான்!
புதுபுதுத் தேடல்கள்.
முகத்தின் பொலிவிலும்,
முன்புற வடிவிலும்
ஒரு கிறக்கம் இருக்கவே செய்கிறது.

உன்னைத்
தொடும் இடமெல்லாம்
தொட்ட பெட்டா சிகரமாய்
இன்பம் உச்ச நிலைக்குச் சென்றுவிடுகிறதே.
கைப்பிடிக்குள் கச்சிதமாய் இருக்கும் போது
இறுக்கமும் இலகிவிடுகிறது.

அடிக்கடி செல்போனை மாற்றுவதில்
ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

_____________________________________________

நல்லதோர் அடையாளம்



நாவல்களைப் படிப்பது என்பது அருகிவரும் காலமாகிப் போகிவிட்டதோ என்ற ஐயப்பாட்டைத் தோற்றுவிக்குமாறு இன்றைய கால கட்டம் இருக்கிறது. மிக அதிகமான பக்கங்களைக் கொண்ட படைப்புகளுக்குத் தொடக்க காலத்தில் இருந்த வரவேற்பினை இன்று காணுமாறு இல்லை. வரலாற்று நாவல்களைப் படித்து மனசைப் பரவசத்திற்கு உள்ளாக்கிய காலம் அன்று இருந்தது. இன்றும் ஒரளவே இருக்கிறது. அன்று பிரபலமான நாவலாசிரியர்கள் சிலரின் சில படைப்புகளைப் படித்து ரசிப்போர் இன்றும் இருக்கவே செய்கின்றனர்.
காட்சி ஊடகங்கள் வந்துவிட்ட பிறகு புனைகதையைப் படிப்பதற்கான சூழ்நிலை குறைந்து வருவதைக் கணக்கெடுக்கவேண்டும். இருப்பினும் இன்றைய நாவல் உலகில் தேர்ந்தெடுத்துப் படிக்கக்கூடிய அளவிற்கு வாசகர்கள் இருக்கின்றனர். அவர்களிடையே தீவிர வாசிப்புத் தன்மை கூடுதலாக இருப்பது வரவேற்புக்கும். நல்ல இலக்கியம் வளர்ந்துவருவதற்கும் உரிய அடையாளத்தைப் பெற்றிருக்கிறது. அவற்றில் ஒன்று தமிழ் மகனின் வெட்டுப்புலி என்னும் நாவலாகும்.
வெட்டுப்புலி என்ற தலைப்பே ஓர் குறியீட்டு உத்தியைக் கொண்டிருப்பதாகக் கருத இடமுள்ளது. அது நாவலாசிரியரின் வாழ்க்கையோடு தொடர்புடையதாகலாம். அதற்குரிய போதிய தடயங்களைக் காணமுடிகிறது.
ஓரு நூற்றாண்டு கால வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை வெறும் வரலாற்றுத் தகவல்களாக இல்லாமல், கதைமாந்தரின் குணங்களில் கலந்தும் கரைந்தும் கதைப்பின்னலாக நகர்த்திச் சென்றிருப்பது ஆசிரியரின் திறத்தைக் காட்டுகிறது.
வரலாற்று நாவல்கள் என்று பொதுவாக அழைக்கப்படுவது தவறான பிரயோகம். தமிழில் வரலாற்று நாவல்கள் என்ற ஒன்று கிடையாது. ஆனால் வரலாற்றுப் புனைகதைகள் உண்டு. உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் புனைவுடன் எழுதுவதையே வரலாற்று நாவல்கள் என்கின்றனர். இது தவறு. வரலாற்றுப் புனைகதை என்ற சொற்பிரயோகம்தான் சரியானது. பொன்னியின் செல்வன் தொடங்கி இதுகாறும் வெளிவந்துள்ளவற்றை அவ்வாறுதான் அழைக்கவேண்டும். அலையோசை போன்ற நாவல்கள் ஓரளவு கற்பனை கலந்த சமகால வரலாற்றுணர்வுடையது.
வெட்டுப்புலி முற்றிலுமாக வேறுபட்ட, மிகைப்படுத்தப்படாத சமகால வரலாற்றைக் கூறுகிறது. நாற்பதுகள் தொடங்கிப் புத்தாயிரம் வரையிலான நீண்டதொரு காலத்தில் நாவல் பயணிக்கிறது. ஆசிரியர் சொல்லியிருப்பது போல, இது நூறுவயது பயணம். கடந்த கால நிகழ்வுகளோடு மட்டுமன்றி, நிகழ்கால உண்மைகளையும் மூடிமறைக்காமல் எழுதப்பட்டதாக உள்ளது.
ஆசிரியரின் முன்னுரையாக, 'நாவலுக்குள்' என்ற பகுதியிலிருந்து சில உண்மைகளை அறிகிறோம்.
'இந்த நாவலைத் திராவிட இயக்க நாவலாக வடிக்கவேண்டியிருக்கிறது; திராவிட கண்ணாடி அணிந்துபடிப்பது அவசியமாக இருக்கிறது'
என மனந்திறந்து பேசுகிறார். திராவிட அரசியலுக்கும் அதோடு தொடர்புடைய சினிமா வளர்ச்சிக்கும் தமிழர்களின் கையில் மௌனசாட்சியாக இருப்பதை வெட்டுப்புலியைப் படமாகக் கொண்ட தீப்பெட்டி உணர்த்திவிடுகிறது. ஒரு தீப்பெட்டியில் அடங்கியுள்ள குச்சிகளைப் போலவே நாவலிலும் எண்ணிக்கை அதிகமான கதைமாந்தர்கள்!. அவர்களின் அகமன வெளிப்பாடுகள் ஒருபுறம்! தீக்குச்சியின் தலையில் இருக்கும் கந்தகக் கொண்டைகளாகக் கதைமாந்தர்களின் உணர்வுகளை-உறவுகளை - உரசல்களை - உரசிப் பார்க்கத் தீப்பெட்டியின் வெளிப்புறத்தில் இருக்கும் கந்தகப் பட்டை!
இப்படி அகமும் புறமுமாகக் கொழுந்து விட்டு எரியும் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் ஆசிரியர். உரசிலில்தானே எதுவும் பற்றி எரியும். கதைமாந்தரின் குணாதிசயங்களும் அப்படிப்பட்டவையே.
கதைமாந்தர்கள் பட்டவர்த்தனமாகப் பேசும் உரையாடல்கள் நாவலுக்கு வலுசேர்த்திருக்கிறது. இந்த நாவலில் யாரும் நிழல் மனிதர்களாக இல்லாமல், நிசமனிதர்களாக்கி இருப்பதும் நாவலுக்கு வலிமை சேர்த்துள்ளது.
நாற்பதுகளின் மையப்பகுதியில், சிறுத்தையைக் கொன்ற கொள்ளுத்தாத்தாவின் படம் வெட்டுப்புலித் தீப்பெட்டியில் காட்சி அளிக்கவும், தாத்தா பற்றிய வரலாற்றுண்மையை அறிந்துகொள்வதற்காக நண்பர்களோடு ( பிரபாஷ், பெர்ணான்டஸ்) கிராமப்புறம் நோக்கிப் பயணிப்பதாகக் கதைக்களத்தினெ தொடக்கம் அமைந்திருப்பது தமிழுக்குப் புதியது.
ஆசிரியர் சார்ந்துள்ளள ஜெகநாதபுரத்தையும், ரங்காவரத்தையும் குளோசப் ஷாட், மிட்டில் ஷாட் என்ற வகைகளில் காட்டியிருப்பது கதைக்கு ஒரு நம்பகத்தன்மை அளிப்பதோடு, ஆசிரியரின் சுயவரலாற்றையும் உணர்த்திவிட்டுள்ளது. நாவலுக்கு ஒரு 'நேட்டிவிட்டி'யைத் தந்துவிடுகிறது.
நாவலில் கதாநாயகனோ, வில்லனோ புகுந்துவிடாது, யாவருக்கும் சம்பங்கு அளித்திருப்பது உண்மையின் உலகம் என்பதனை உறுதி செய்கிறது. நாவலில் பேராசிரியர்கள் சிலரும், கவிஞர்கள் சிலரும், மாவீரன் பிரபாகரனும் இடம் பெற்றிருப்பது ஒரு வகையில் நாவலாசிரியரைப் பாதித்த பெயர்களாக- அவர்கள் 'மின்னல்' வருகையாக வந்துபோவது இயல்பாக உள்ளது. லட்சுமணன் தொடக்க முதல் இறுதி வரை நாவலில் உலாவந்தாலும் அவனை ஆசிரியர் கதாநாயகனாக ஆக்கிவிடவில்லை.
வெள்ளையர் குதிரையில் சவாரி செய்துபார்த்துவிடுவது என்ற லட்சுமணின் எண்ணம் கதையைத் தொடங்குவதற்கும், தொடர்வதற்குமுரிய எதிர்பார்ப்பைத் தருகிறது. வெள்ளைக் காரனின் குதிரையைச் சவாலாக ஏற்றுக்கொண்டு சவாரி செய்வது கூட நம்மை அடக்கி ஆண்ட வெள்ளையரை நாம் அடக்கிவிடவேண்டும் என்ற ஆதங்கத்தை அவன்பால் காணலாம்.
நாற்பதுகளில் தசரத ரெட்டியின் சகலை சிறுத்தையை வெட்டியது இயல்பான வருணனையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. முப்பதுகளில் சின்னா ரெட்டி சொக்கலிங்க ரெட்டியின் உடலில் ஏற்பட்ட கட்டிக்கு வைத்தியம் பார்த்ததும் அவ்வாறே இயல்பான நிகழ்ச்சியாக வந்துபோகிறது. தசரத ரெட்டி முத்தம்மா மீது கொண்டிருந்த சபல எண்ணம் பிராய்டின் உளவியல்படி அழுத்தமானதோர் அகமனப்பதிவு. நாற்பதுகளில் லட்சுமணன் குணவதி மீதுள்ள விருப்பமும் அப்படிப்பட்டதே. முத்தம்மாள் கணவன் ருத்ரா ரெட்டி ஒரு வித்தியாசமான படைப்பு. இன்றும் கூடக் கிராமப் புறங்களில் அவனைப் போலவே சிலர் இருப்பது நிசம். ஆறுமுக முதலியார்- சுந்தராம்பாள் குடும்ப உணர்வு யதார்த்தம். அவர்கள் உரையாடலும் இயல்பான வெளிப்பாடு. கணேசன் பெரியார் மீது கொண்டுள்ள தீவிரப் பற்றும், பிராமணர்கள் மீது கொண்டிருந்த தீவிர வெறுப்பும் நாவலுக்கு இன்னொரு பரிமாணம் தருகிறது. இந்த அளவிற்குத் தமிழ் நாவல்களில் துணிச்சலாக இவ்விரண்டையும் அலசியவர்கள் யாருமில்லை. தியாகராசன்-ஹேமலதா வாழ்க்கை முரண்கள் சற்றே வித்தியாசமானவை. தியாகராசனிடம் நிலவி வந்த பிராமண வெறுப்பு ஒரு சிறு நிகழ்ச்சியால், மாறிவிடுகிறது. அவன் தன் போக்கையும் எண்ணத்தையும் மாற்றிக் கொண்ட பின், அவனது பண்பு சற்று மாற்றுக் குறைவாகவே உள்ளது. சினிமா எடுக்க முயன்று சீரழிவைத் தேடிக் கொண்ட சிவகுரு வாழ்வு ஒரு நல்ல படப்பிடிப்பு.
திராவிட இயக்கம் பெரியாரால் சாதித்தது பற்றிய கண்ணோட்டம்- அவர் வாழ்வின் இறுதிப் பயணத்தை நெருங்கிக்கொண்டிருந்த போது, சௌந்திரபாண்டிய நாடார் லட்சுமண ரெட்டிக்கு, பெரியார் காங்கிரஸில் இருந்த கால கட்டத்தில் அதாவது, ஆயிரத்து இருபத்தி நான்கில், நாடார் குல மித்திரனில் வெளிவந்த பெரியார் பேச்சை வெளியிட்டிருப்பதைப் படித்துக் காட்டுவதும். அதனை லட்சுமண ரெட்டி நம்ப மறுப்பதும் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.