அரசியல் செய்யும் கொசுக்கள்
இராம.குருநாதன்
உறங்கும்போது
படுத்த
கோணத்தில்
கோயில்
துவார பாலகர் போல,
இடது
காலை நீட்டியும்,
வலது
காலை மடக்கியும்
கையில்
மட்டும் கதாயுதத்திற்குப் பதிலாக
உறக்கங்கெடுப்பதை
விரட்ட கொசு மட்டை!
எத்தனை
முறை அதைப் பயன்படுத்தினாலும்
ஒழிவதாயில்லை
கொசுக்களின் கூட்டம்
கொசு
ஒழிப்பும் லஞ்ச ஒழிப்பும் ஒன்றுதான்
விளம்பரப்படுத்துகிறார்கள்
ஒழித்துவிட்டோமென்று!
எவ்வளவு
மருந்தடித்தாலும் மனிதர்கள்
பழகிவிட்டனர்
இரண்டுக்குமாக..
கையில்
கொசு மட்டை தூக்கிப் பயன் என்ன?
வீதியில்
கொசு மருந்தடித்தால்
வீட்டுக்குள்
உரிமையோடு நுழைவன புகையோடு கொசுவும்
அவை
நுழைவதற்கென்றே
ஒவ்வொரு
சன்னலையும் திறந்துவைக்கிறோம்..
சாக்கடைகள்
வீட்டிலும் வெளியிலும் அதிகரிப்பதால்
அரசியல்
செய்யும் கொசுக்களை
ஒழிக்கமுடியவில்லை..
எவ்வளவுதான்
முயற்சி செய்தாலும் முடியவிலை.
என்ன
செய்வது?
ஆனால்.
ஒன்று
மட்டும் தெரிகிறது.
லஞ்சத்தை
ஒழிக்க முடியாதது போல,
கொசுக்களையும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக