வியாழன், 19 மார்ச், 2015

கவிதை

வாழ மறந்த நாள்கள்....!


உன்னைப் பார்த்த பொழுதுகளை விடப்
பார்க்க நினைத்த
பொழுகளே
மகத்தானவை.

எழுதிக் குவித்த கவிதைகளை விடவும்
உன்னைப்பற்றி எழுதுவதற்கு
மனத்தில் அசைபோட்ட
உயிர்மெய்எழுத்துகளே
உயிர்ப்பானவை.

உன்னோடு பேசிய நேரங்களை விடப்
பேசிவிட மாட்டோமா என்ற
ஏக்கத் தவிப்புகளே
பொன்னான நேரங்கள்.

வருவேன் என்று சொல்லிக்
காத்திருந்து நீவந்ததற்குமுன்
உனக்காக  காத்திருந்த பொழுதுகள்
பசிக்கான கணங்கள்

உன் பேச்சை உன்னிடமிருந்து
கேட்டதைவிடவும் மற்றவர்களிடமிருந்து
உன்னைப் பற்றிய பேச்சு
பிரியமாக இருந்திருக்கிறது

நாம் வாழ்ந்த நாள்களைவிடவும்
வாழ மறந்த நாள்களே
இன்னும் நிழலாய்த்
தொடர்ந்துகொண்டிருக்கின்றன
வாழ்க்கை வெளியில் !                                                

1 கருத்து:

  1. வணக்கம்
    காதல் இரசம் சொட்டும் வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு